Yearly Archives: 2011
ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ்
குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி. ஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த … Continue reading

விவேகானந்தரின் வெற்றி கதை
கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் … Continue reading

பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு … Continue reading

112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’
யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது “இளைஞர்’ ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். … Continue reading

மாரிச்செல்வம் – ஒரு நிஜ ஹீரோ
சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ் தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும் பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் … Continue reading

நம்பிக்”கை’! யுடன் சாதனை படைக்கும் பெண்
பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கால்களாலேயே செய்து காண்போரை பிரமிக்க வைக்கிறார் ஓர் இளம் பெண். சிலர் எல்லா உறுப்புகளும் நன்றாக இருந்தும் பிச்சை எடுத்தும் ஏமாற்றி பிழைத்து வாழ்கின்ற இந்த கால கட்டத்தில் பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த இப்பெண் தன்னம்பிக்கை ஒன்றையே கையாக கொண்டு அனைத்து … Continue reading

கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை
;என் சொந்த ஊர் சென்னை. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி பெண். ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தேன். என் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை, என் பள்ளி தான். “கபடி விளையாட்டில் நீ கண்டிப்பா உயரம் தொடுவாய்’ என்று ஊக்கமளித்தனர். ;நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவிற்கு … Continue reading

எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை
சிறுவயதில் எவரெஸ்ட்டை தொட்டு, தன் பயணத்தை சுய சரிதையாக எழுதியுள்ள அர்ஜுன் வாஜ்பாய்: நொய்டாவில் ஒரு சாதாரண;குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதிலேயே சாகச கதைகளைக் கேட்பதில், படிப்பதில் ஆர்வம் அதிகம். பெரியவனான பின், சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.பத்து வயது வரை நானும், மற்ற குழந்தைகளைப் போல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமாக … Continue reading

இது வெற்றி கதைகளின் தொகுப்பு
என் நண்பர்களே, நான் ஆங்கிலத்தில் ‘Inspire Minds’ என்னும் வலைப் பூவில் பல வெற்றிக் கதைகளை தொகுத்து வழங்கி வருகிறேன். ஆங்கிலத்தில் என்னுடைய ‘Inspire Minds’ வலைப் பூவை படித்த பல நண்பர்கள் தமிழிலும் ஒரு வலைப் பூவை தொடங்க என்னை கேட்டு கொண்டனர். எனவே பிரபல இதழ்களில் வெளி வந்த பல வெற்றிக் கதைகளை … Continue reading
